Wednesday, February 13, 2019

வட மாகாண கல்வி வளர்ச்சிக்கு உதவ, இந்தியா முன்வந்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு, இந்தியா எந்தவித உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி பல்கலைக் கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர் இன்றைய தினம், வடக்கு மாகாண ஆளுநர், கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, பின்தங்கிய நிலையிலுள்ள வட மாகாண கல்வியை, மீண்டும் கட்டியெழுப்ப துணை புரியுமாறு இந்திய தூதுக்குழுவிடம், ஆளுநர் சுரேன் ராகவன் வேண்டுகோள் விடுத்தார்.

ஆளுநரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இந்திய பிரதிநிதிகள், வட மாகாண கல்வி வளர்ச்சிக்கு தம்மால் முடிந்த உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக குறிப்பிட்டனர்.

இதேவேளை, இலங்கை- இந்திய பல்கலைக்கழக பீடங்களுக்கிடையில் மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும், வட ஆளுநர், இந்திய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான வழிமுறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக, இதன்போது இந்திய பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளதாக, வட மாகாண ஆளுநர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment