Tuesday, February 12, 2019

வைத்தியரால் ஏற்பட்ட எனது அப்பாவின் மரணம். தந்தையை இழந்த மகனின் துயரப்பதிவு.

முன்னொருகாலத்தில் வைத்தியர் உருவத்தில் கடவுள் வந்து என்னை காப்பாற்றினார் என்று மக்கள் வைத்தியரை கடவுளுக்கு நிகராக போற்றிப் புகழ்வர். ஆனால் இன்று வைத்தியர் வேடத்தில் யமதூதன் வந்தான் என்று மக்கள் திட்டித்தீர்க்கின்றனர்.

குறிப்பாக இலங்கையிலே வைத்தியர் மற்றும் வக்கீல் ஆகிய தொழில்களை புரிகின்றவர்கள் மீது மக்கள் மிகவெறுப்பும் சந்தேகமும் கொண்டுள்ளனர். இவ்விரு தொழில்களும் மனிதாபிமானத்தை காக்கும் புனித தொழிலகளாகும். நோயுற்றவனை பாதுக்காக்கவும் அநீதி இழைக்கப்பட்டவனுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவும் எனவுள்ள இவ்விரு தொழிலாளிகளும் இன்று தங்களது பை மட்டும் நிறைந்தால்போதும், அதற்காக எந்த அக்கிரமத்தையும் செய்வோம் என செயற்படுகின்றார்கள்.

அவ்வாறு ஒரு நோயாளி மரணவேதனையில் அழுகின்றபோது தற்போது மழை பெய்கின்றது நாளைவந்து பார்கின்றேன் என்ற வைத்தியரின் பொறுப்புணர்சியின்மையால் தந்தையரை இழந்து நிற்கும் நபர் ஒருவரின் துயரப்பதிவு ஒன்று இவ்வாறு அமைந்துள்ளது.


அப்பாவின் மரணம்....

2002 February 13 அன்று நான் தாய்நாட்டை விட்ட சில காரணங்களுக்காக சவுதி அரேபியா நோக்கி பயணமாகிறேன்....

2004 December 5 அன்று மட்டக்களப்பு எங்கும் கடும் மழை அன்று அவரது தேவை காரணமாக மண்டூர் எனும் கிராம்சென்ற எனது அப்பா நாங்கள் வசித்த காக்காச்சிவட்டை என்னும் எங்கள் விவசாய கிராமம் நோக்கி புறப்பட்டு செல்கிறார். அடைமழையும் காற்றும் வீசுகிறது, வீட்டை அண்மிக்கும் தருவாயில் அப்பாவால் துவிச்சக்கர வண்டியை மிதிக்க இயலவில்லை...

துவிச்சக்கரவண்டியை உருட்டிக்கொண்டே அப்பா வீடு வந்தடைகிறார்..

முற்றாக மழையில் நனைந்தமையால் குளித்துவிட்டு ஓய்வேடுக்கிறார்..

அன்றிரவு 8: 00 மணிக்கு ஒரு கால் வலிக்க ஆரம்பித்து இடுப்புவரை செல்கிறது அவரால் தாங்கமுடியாத அளவிற்கு வலி அதிகரிக்கிறது..

அம்மாவிடம் வலி தாங்க முடியவில்லை என சொல்கிறார்.

உடனே அம்மா அண்ணாவை அவசரமாக அழைத்து உடனடியாகவே #களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றானர்.. .

மழை ஓய்ந்தபாடில்லை..

மருத்துவமனையில் சேர்பித்ததும்

மருத்துவத்தாதி அப்பாவிற்கு #பனடோல் மட்டுமே மருந்தாக கொடுக்கிறார்..

அன்று சேவையில் வைத்திய அத்தியட்சகராகவிருந்த DR வசீகரன் அவர்களுக்கு தொடர்பெடுத்து அப்பாவின் நிலை பற்றி கூறுகிறார்..

அதே வைத்தியசாலையில் 150M தூரத்திலே உள்ள விடுதியில் தங்கியிருந்த வசீகரன் மழையை காரணம்காட்டி உடனே வந்து அப்பாவை பரிசோதிக்க மறுத்துவிடுகிறார்..

இரண்டு அண்ணாக்களும் அம்மாவும் அப்பாவின் பக்கத்திலே இருக்கின்றனர் ..

இரவு 10 மணி அப்பா ஒரு அண்ணாவை துணைக்கு நிற்குமாறும் மற்ற அண்ணாவை அம்மாவை கூட்டிக்கொண்டு வீடுசெல்லுமாறு கூறுகிறார்..

அப்பாவிற்கு வலி அதிகரித்தே செல்கிறது..

அண்ணா அப்பாவிடம் என்ன செய்கிறதுஅப்பா என கேட்கிறார்..

அப்பாவோ "எனக்கு சாகிற வலி வலிக்குது நீ என்ன செய்யபோகிறா அம்மாவ கூட்டீற்று போ" என சொல்கிறார்..

மீண்டும் அங்குள்ள மருத்துவ தாதியிடம் சென்று வைத்தியரை வரவழைக்க கேட்கின்றனர்..

வைத்தியரோ மழை என்னால் இப்போ வரமுடியாது காலையில் வந்து பார்த்துகொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்...

வேறு வழியின்றி அம்மாவும் ஒரு அண்ணாவும் வீட்டுக்கு செல்கின்றனர்...

இரவு 12 மணியளவில் வலி அதிகமாகி வலி தாங்க முடியாமல் அண்ணா வின் கண்முன்னே அப்பாவின் உயிர் பிரிகிறது..

Dr வசீகரனால் அடுத்தநாள் காலையில் அப்பாவின் மரணச்சான்றை மட்டுமே தரமுடிந்தது..

இப்படியே எத்தனை உயிர்களை பறித்தாரோ இந்த வசீகரன்...😢 😢

(அப்பாவிற்கு மரணம் பாம்புக்கடியால் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் இன்றுவரை நீழ்கிறது....)

No comments:

Post a Comment