Thursday, February 28, 2019

உலகளாவிய பொருளாதாரத்துடன் செயல்பட, புதிய தொழிநுட்பம் அவசியம் - பிரதமர் ரணில்

உலகளாவிய பொருளாதாரத்துடன் செயற்படுவதற்கு புதிய தொழில்நுட்பத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை ஏற்படுத்தி டிஜிட்டடில் பொருளாதாரத்திற்கு தேவையான டிஜிட்டல் கல்வி முறையினை ஆரம்பிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

நாட்டின் சகல பாடசாலைகளினதும் உயர்தர மாணவர்களுக்காக டெப் கணனிகள் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ''அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை'' என்ற வேலைத்திட்டத்தின் கீழ், கம்பஹா கனேமுல்ல ஹேமமாலி வித்தியாலயத்தில் இரண்டு மாடி தொழில்நுட்ப கட்டிடடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதார முறையை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இணக்கமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் தற்போது ஆராயப்படுகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதனூடாகவே டிஜிட்டல் பொருளாதாரம் சாத்தியமாகும்.

இவ்வாறான மேம்பட்ட பொருளாதார கொள்கையின் அடிப்படையிலேயே, இலங்கை பெற்ற கடனை மீளச் செலுத்த முடியும். இதன் மூலம் ஏற்றுமதியின் ஊடாக பத்தாயிரம் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டு முடியும். இந்தாண்டு அதிகளவிலான வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களிலும் இலங்கை பெற்ற வெளிநாட்டு கடன்களை செலுத்த இவ்வாறான டிஜிட்டல் பொருளாதார முறை அவசியமாகிறது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com