Friday, February 15, 2019

ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில், துப்பாக்கியுடன் ஒருவர் கைது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட நிகழ்வொன்றில் வைத்து, துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிபுர - நுவரகல பகுதியில், சந்தேகத்துக்கிடமான வகையில், தனது பணப் பையில் துப்பாக்கி, துப்பாக்கி ரவையின் பாகங்கள் என்பவற்றை வைத்திருந்த நிலையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இடம்பெற்ற குறித்த நிகழ்வில், சந்தேகத்துக்கிடமான குறித்த நபர் நடமாடியுள்ளார். இதனை அடுத்து அவரை சோதனை செய்த போது, வெடிக்கும் நிலையில் இருக்கும் வெடிபொருட்களின் பாகங்களை தனது பொதியில் அவர் மறைத்து வைத்திருந்ததாக, ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக, ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment