Saturday, February 16, 2019

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு, இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்பு

இலங்கையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணைக்கு, இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் போதனைகளுக்கு அமைய, எந்தவொரு காரணத்திற்காகவும் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என, பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் போதைப்பொருளை ஒழிப்பதற்கு கட்டாயமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கான நியாயமான செயற்பாடொன்றை அனைவரின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்க வேண்டும் என, குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 14 ஆயர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment