Tuesday, February 12, 2019

எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டைன் ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 6 ரூபாவினாலும், 95 ஒக்டைன் ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 5 ரூபாவினாலும், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 8 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 4 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்புடன், 92 ரக பெற்றோல் 129 ரூபாவாகவும், 95 ரக பெற்றோல் 152 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. 118 ரூபாவாக காணப்பட்ட சுப்பர் டீசலின் விலை 126 ரூபாவாகவும், ஒட்டோ டீசலின் விலை 103 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாகவும் நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment