Tuesday, February 12, 2019

அர்ஜுன் அலோசியஸிடம், மூன்று மணிநேரம் தொடர் விசாரணை.

பெர்ப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிடம் இந்த இன்றைய தினம், சுமார் மூன்று மணிநேரம் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் அர்ஜுன் அலோசியஸ் இன்று முன்னிலையானார்.
இதன்போதே அவரிடம் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, பெர்ப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

எனினும் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி, கடும் நிபந்தனையின் அடிப்படையில், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment