Sunday, February 17, 2019

ஐக்கிய நாடுகள் அதிகாரியை அச்சுறுத்திய சம்பவம், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் உயர் அதிகாரி ஒருவர், யாழ்ப்பாணத்தில் வைத்து, இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனை அடுத்து, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் சிலர், சம்பவம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பா, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு, ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியில் இலங்கை இராணுவத்தினர் எனக் கூறிக் கொண்ட இருவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவரின் வதிவிடத்துக்குள் நுழைந்துள்ளதாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஒருவர் கைத்துப்பாக்கியை வைத்திருந்ததுடன், அவர்கள் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி குறித்து விசாரித்ததுடன் அவர்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

எனினும், தமது தரப்பினர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என, வடக்கில் உள்ள இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது இந்த சம்பவத்தை ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் சிலர், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாதுகாப்பு அமைச்சு, ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment