Friday, February 15, 2019

எவராக இருந்தாலும் பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி

போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்களது அந்தஸ்து, பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற அநுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார்.

இதன் போது, சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களும் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment