Wednesday, February 13, 2019

பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாக்களிப்பு இயந்திரமாக மட்டும் இருக்கக்கூடாது - வேலுகுமார்

நாடாளுமன்றத்தில் தக்க நேரத்தில், பெரும்பான்மையை நிரூபிக்கவும், சரியான சட்டமூலங்களை நிறைவேற்றவும், வாக்களிப்பு இயந்திரமாக மாத்திரம் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தப்பட கூடாது என, என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு, நாடாளுமன்றத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், இலங்கையில் இன்னும் கட்சி அரசியலே நடத்தப்படுவதால், அதி உயர் சபையிலும் ‘வெட்டுக்குத்து’ அரசியல் ஏதாவதொரு வடிவத்தில், தொடர்ந்த நிலையில் இருப்பது, கசப்பான உண்மையாகும்.

துறைசார் விடயத்தில் தேர்ச்சி இல்லாதவர்களுக்கு அந்த அமைச்சுப் பதவி வழங்கப்படுகின்றது. அரசாங்க இயந்திரம் சிறப்பாக செயற்படுவதற்கு இத்தகைய அணுகுமுறைகளே பெரும் தடையாக உள்ளன.

அமைச்சுப் பதவி கிடைக்காததால், அரசாங்கத்தையே இவ்வாறு விமர்சிக்கின்றார் என, சிலர் என் மீது வியாக்கியானம் கூறலாம். ஆனால், உண்மை நிலைமையை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு எமக்குள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவதற்கும், சட்டமூலங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குமென வாக்களிப்பு இயந்திரமாக மட்டும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தக்கூடாது. மாறாக நாடாளுமன்றத்தில் காணப்படும் தற்போதைய அரசியல் முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment