Thursday, February 14, 2019

ராஜபக்ஷக்களுக்கு இடையில், ஒரு பனிப்போர் நிலவுகிறது - பொன்சேகா

தற்போது ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் தொடர்பாக ராஜபக்ஷக்களுக்கு இடையில், கடும் பனிப்போர் நிலவுவதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனியில் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒருபோதும் சவாலாக இருக்கப் போவதில்லை.

இந்த தேர்தலில் தாங்கள் வெற்றிபெற போவதாக, அந்த கட்சிகள் கூறி வருகின்றன. எனினும் அது கனவாக மட்டுமே இருக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் மத்தியிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான எதிர்க் கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாறியுள்ளது.

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பிரதான இரு சக்திகளாக விளங்கும் என, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment