Tuesday, February 19, 2019

மொரட்டுவ கழிவுநீர் முகாமைத்துவத்திற்காக இலங்கைக்கு பிரான்ஸ் 75 மில்லியன் யூரோ கடன் உதவி

இலங்கை அரசாங்கத்துக்கும் – பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் பிரிவுக்குமிடையில் கடன் வழங்கல் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்ற இந்த ஒப்பந்த கைச்சாத்திடலில், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் பிரிவின் இலங்கைக்கான பணிப்பாளரும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவருமான மார்டின் பேரன்ட் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

குறித்த ஒப்பந்தத்தில் 75 மில்லியன் யூரோ கடனை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க பிரான்ஸ் அரசாங்கம் இணைகியுள்ளது. இரத்மலானை மொரட்டுவ பகுதிகளில் கழிவுநீரை அகற்றுவதற்கான திட்டத்தின் முதற்கட்டத்தில் இரண்டாவது பிரிவு நடவடிக்கைக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment