Sunday, February 17, 2019

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, இதுவரை 70 முறைப்பாடுகள்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு, இதுவரையில் 70 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள், எதிர்வரும் 28 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஜனவரி 15 முதல், 2018 டிசம்பர் 31 வரையான காலத்தில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்பட்டும் ஊழல்கள் தொடர்பாகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனிடையே குறித்த ஆணைக்குழு, கடந்த 14 ஆம் திகதி கூடிய போது, ஆணைக்குழுவுக்கு முதலில் கிடைத்த 48 முறைப்பாடுகளில் இரண்டினை விசாரிப்பதற்கு, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment