Monday, February 18, 2019

வவுனியாவில் இருந்து சென்ற பேருந்து மின்மாற்றியில் மோதி 4 பேர் பலி

சிலாபம், மஹாவெவ பகுதியில் சம்பவித்த வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மின்மாற்றி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை சம்பவித்த விபத்தில் சுமார் 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மின்மாற்றி ஒன்றில் பேருந்து மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 19 பேரும் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த கோரா விபத்து தொடர்பில் பொலீஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments:

Post a Comment