Tuesday, February 19, 2019

கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் தகவல் வெளியாகியது

இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கொக்கேன் உட்பட போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள்
மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் உள்ளார்களா என்ற கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. மாதிவெலயில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது அவர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

கொக்கேன் உட்பட போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் தகவல்களை தான் சபாநாயகருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் ஒப்படைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கபினட் அமைச்சர்கள், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கொக்கேன் போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் மாத்திரமின்றி இவர்களோடு பணி புரியும் உறுப்பினர்களும் உயர் பதவிகளிலுள்ளவர்களும் கூட இந்த போதைப் பொருளைப் பயன்படுத்துகின்றனர்.

இவர்களின் விபரங்களை இப்போதைக்கு வெளிப்படுத்தவில்லை. காரணம் விசாரணைகளுக்கு தடையாக அமையும் என்பதனால் அவர்களது பெயர்களை வெளியிடவில்லை என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment