Sunday, February 17, 2019

தோட்ட தொழிலாளர்களின் நலனுக்காக, கடந்த ஆண்டு, 200 கோடி ரூபாய் செலவு.

பெருந்தோட்டப்புறங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வீடமைப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த வேலைத்திட்டங்களுக்காக கடந்த வருடத்தில் மட்டும், 200 கோடி ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிதியத்தை, பெருந்தோட்ட கம்பனிகள், பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் ஒன்றியம்,மற்றும் அரசாங்கம் ஆகியன இணைந்து அமைத்துள்ளன. இதுவரை குறித்த நிதியம் 2 லட்சத்து 10,000 ஆயிரம் பேரை, பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்,1200 வீடுகளை முழுமையாக நிர்மாணித்துள்ளதுடன், அவற்றில் 1045 வீடுகள், பெருந்தோட்ட மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகளில், வரவேற்பறை,இரண்டு படுக்கையறைகள்,சமையல் அறை,கழிவறை வசதிகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அனைத்து வேலைத்திட்டங்களுக்கு, 200 கோடி ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நித்தியம்,மேலும பல அபிவிருத்தி பணிகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment