Tuesday, February 12, 2019

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்கள் அரங்கத்திற்கு செலுத்திய தண்டப்பணம் 130 மில்லியன் ரூபா

மின்சார பாவனை தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட இரண்டாயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த 2500 பேரும் கடந்த வருடத்தில் மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மூலம் இலங்கை மின்சார சபை 130 மில்லியன் ரூபாவை தண்டப் பணம் கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment