Thursday, February 14, 2019

முதலாம்ஆண்டிற்கு மாணவன் ஒருவரை சேர்ந்துக் கொள்வதற்கு 1 இலட்சம் ரூபா இலஞ்சம் - வளமாக சிக்கினார் அதிபர்

காலியில் உள்ள பெண்கள் பாடசாலை அதிபர் இலஞ்சம் பெற முற்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர், 1 ஆம் ஆண்டிற்கு மாணவன் ஒருவரை சேர்ந்துக் கொள்வதற்காக1 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ள முற்பட்ட போது, அவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, இரண்டு வாரங்களாக குறித்த மாணவன் பாடசாலைக்கு வருகை தந்த போது அவருடைய பெயர், இடாப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. குறித்த மாணவனின் பெயர் இடாப்பில் பதிய படவேண்டுமாயின், 1 இலட்சம் ரூபா கொடுக்க வேண்டும் என்று அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த பெற்றோர் இந்த விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். பின்னர் நேற்றைய நாளில் குறிப்பிட்ட இலஞ்சத் தொகையை, அதிபருக்கு வழங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த அதிபர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment