இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் S. அருள்சாமி காலமானார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமி இன்று அதிகாலை காலமானார்.
59 வயதான இவர், தொழிற்சங்கவாதியும், அரசியலில் நீண்ட நாள் அனுபவம் கொண்டவருமாவார். சுகயீனம் காரணமாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தமது தந்தை இயற்கை எய்தியதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமியின் புதல்வர் உறுதிப்படுத்தினார்.
எனினும் அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
0 comments :
Post a Comment