Thursday, January 10, 2019

கடமைகளை பொறுப்பேற்றார் தயாசிறி ஜயசேகர

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று கட்சி தலைமையகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு சென்ற கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன் அவருக்கான நியமனக் கடிதத்தையும் ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment