Sunday, January 13, 2019

தொடர்மாடி குடியிருப்புக்களை, மக்களிடம் கையளிப்பதில் சிக்கல் - சஜித்.

தொடர்மாடி குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு கையளிப்பதில், சில பிரச்சினைகள் நிலவுவதாக, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு, கலாசார மற்றும் கட்டுமாணத்துறை அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தொடர்மாடி குடியிருப்பு திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் சஜித் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான தொடர்மாடி குடியிருப்புகளின் உரிமைகளை, குடியிருப்பாளர்களுக்கு வழங்க முடியும்.

எனினும் தொடர்மாடி தொகுதிகள் அமைந்துள்ள காணிகள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பில் உள்ளமையால் குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரித்துள்ளார்.

எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்த யோசனைக்கு அமைவாகவே, தொடர்மாடி குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, கட்டுமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment