அடுத்து வரப்போகும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளதாக, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வு, பிரதி சபாநாயகர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது.
சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல், 27-2 இன்கீழான கேள்வி உட்பட தினப்பணிகள் முடிவடைந்தப்பின்னர், மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் வைத்து தினேஸ் குணவர்தன கருத்து வெளியிட்டார்.
அப்போது தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகின்றதா? என நாடளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ,சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சபைமுதல்வர், “மாகாணசபைத் தேர்தல் மட்டுமல்ல ஜனாதிபதித் தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.
மாகாணசபைத் தேர்தலை விகிதாசாரமுறைப்படி நடத்துவது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, இணக்கமும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பழையமுறைப்படி தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராகவுள்ளதாக சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறினார்.
No comments:
Post a Comment