Saturday, January 12, 2019

புலிகள் தமிழ் மக்களை மாத்திரமல்ல தமது இயக்க உறுப்பினர்களையே கொன்றொழித்தார்கள். மாவை சேனாதிராஜா

புலிகள் பயங்கரவாதிகள் அல்லவென்றும் அது ஒரு புனித இயக்கம் என்றும் மேற்கொள்ளப்படும் போலிப்பிரச்சாரத்தை தற்போது தமிழரசுக் கட்சியினர் தவிடுபொடியாக்கி வருகின்றனர்.

நேற்று முன்தினம் பாராளுமன்றில் பேசிய தமிழரசுக்கட்சியின் அடுத்த தலைவர் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்ற சுமந்திரன், இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களை மேற்கொண்டது போல் புலிகளும் போர்குற்றங்களை மேற்கொண்டுள்ளார்கள் என்று கன்சாட்டில் பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னர் புலிகள் ஜனநாயகத் தமிழ் தலைவர்களை கொன்றொழித்தனால் தமிழ் தலைவர்கள் உயிரச்சத்தில் புலிகளுடன் டீல் ஒன்றை செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி உயிர் தப்பிக்கொண்டனர் எனத் தெரிவித்திருந்திருந்தார்.

இக்கருத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் புலிகளை வைத்து அரசியல் செய்துவரும் பெருச்சாளிகளுக்கு இவ்விடயம் பெரும் சங்கடமாக அமைந்துள்ளது. புலிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டால் தங்களது கஞ்சிக்குள் மண்விழுந்தாக போய்விடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

அதன் அடிப்படையில் சயந்தனின் மேற்படி கருத்து அனுமதிப்கப்படக்கூடியதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களின் கடந்த 9ம் திகதி சந்திப்பொன்றில் புலிகளின் பெயரால் வாக்குப்பிச்சை கேட்டலையும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இக்கேள்விக்கு பதிலளித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா : 'விடுதலைப்புலிகள் ஜனநாயக மீறலில் ஈடுபட்டது உண்மையே. குறிப்பாக தமிழ் தரப்பையே கொன்றார்கள். அதற்கும் மேலாக தங்களது இரண்டாம் நிலைத்தலைவராக இருந்த மாத்தையாவையும், 200 போராளிகளையும் சுட்டுக் கொன்றார்கள்' என நேரடிப் பதிலை வழங்கியுள்ளார்.

இக்கேள்விக்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா மிகவும் ஆத்திரமடைந்த நிலையில் புலிகள் மேற்கொண்ட ஜனநாயக மறுப்புக்களை பட்டியலிட ஆரம்பித்தபோது, குறுக்கிட்ட பா.உ சுமந்திரன், புலிகள் ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபட்டவர்களை புலிகள் கொன்றார்கள்தானே என்றும் அவ்வாறு செய்யவில்லை என்று எவராலும் மனச்சாட்சியை தொட்டு கூறமுடியுமா என்று கேட்டபோது, கிளிநொச்சி கேணைப்பயல் சிறிதரன் கண்ணை பிதுக்கியதாக அறியக்கிடைக்கின்றது.

No comments:

Post a Comment