Saturday, January 12, 2019

இலங்கையில் நாய் வளர்ப்போருக்கு ஆராச்சியாளர்கள் விடுத்த எச்சரிக்கை

நாய்களிடமிருந்து பரவக் கூடிய ஒருவகை நோய் இனங்காணப்பட்டுள்ளமையால், இலங்கை மக்களை அவதானமாக செயற்படுமாறு, பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

தென்னாபிரிக்கா நாடுகளிலேயே அதிகளவு பரவலாக காணப்பட்டு வந்த இந்த நோய், தற்போது இலங்கையில் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியது என்பதை பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் பாரதூரமானது அல்ல என்று தெரிவிக்கும் அவர்கள், இதன்மூலம் தோலில் பாதிப்பு ஏற்படக் கூடுமென பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அசோக்க தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண் நோயால் பாதிக்கப்பட்ட நாயொன்றை பரிசோதைக்கு உட்படுத்திய போது, ட்ரை-பெனசோமா (Trypanosoma) என்ற நோய் ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாக பேராசிரியர் தங்கொல்ல தெரிவித்துள்ளார். குறித்த நோய் மக்களுக்கு பாரதூரமான தாக்கத்தினை ஏற்படுத்தாத போதிலும், தோல் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளமையால் வீட்டில் நாயை வளர்க்கின்றவர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment