Wednesday, January 9, 2019

இலங்கை ராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக சவேந்திர டி சில்வா நியமனம்.

இலங்கை ராணுவத்தின் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் புதிய ராணுவ தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 ஆவது தாதியாக நியமனம் பெற்றுள்ளார். இவர் இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது பிரிவு கட்டளை அதிகாரியாக, முக்கிய பங்காற்றியவராவார்.

இதனிடையே இறுதிக்கட்டப் போரில் நிகழ்த்தப்பட்ட மோசமான போர்க்குற்றங்களுடன் இவருக்குத் தொடர்புகள் இருப்பதாக, தமிழ் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர் என்ற ரீதியிலும் இவருக்கான பதவி உயர்வுகள் கடந்த காலங்களில் மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment