Wednesday, January 9, 2019

ஜனாதிபதி கொலைச் சதி தொடர்பில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்த நாமல்

பாதாளக் குழுவினரைக் கட்டுப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் எந்த செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தின் போது அவர், பாதாள உலகக் குழுவினர் தொடர்பில் தமது அவதானிப்புகளை நேற்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

இப்போது செயற்படும் அரசாங்கம் வெளிநாட்டு கொள்கைக்கு மதிப்பளிக்கின்றதா? என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக சந்தேகம் வெளியிட்ட அவர், இப்போது யுத்த குற்றசாட்டுகள் தொடர்பில் பெருமளவில் பேசப்படுகின்றது என்றும் தெரிவித்தார். இன்று யுத்த குற்றசாட்டு தொடர்பில் பேசுகின்றவர்கள், கடந்த காலங்களில், அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை இராணுவத்திற்கு எதிராக கூட்டு பிரேணையை நிறைவேற்றியிருந்தார்கள். இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாக ஐ.நாவில் கூறினார்கள். இப்போது இராணுவத்தை சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றிவிட்டதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் கூட தனிப்பட்டத் தேவைக்கு இணங்கவே நியமிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் இப்போது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதாளக்குழுவினரின் நடமாட்டமும் சுமார் நான்கு வருடங்களாக அதிகரித்துள்ளது. நாட்டின் தலைவரை கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் தொடர்பில் கூட, எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதுதான் இலங்கையின் இன்றைய பாரதூரமான நிலைமையாகும் என நாமல் ராஜபக்ஷ அடுக்கடுக்கான குற்றச்சாட்டை சுமத்தினார்.

No comments:

Post a Comment