இந்த வருடத்தின் முதலாவது அரசியல் அமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது.
இன்றைய கூட்டத்தில் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. அத்துடன் அண்மையில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஈவா வனசுந்தரவின் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிப்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.
தற்போது உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றகளுக்ககான நியமனங்கள் தொடர்பில் குழப்பமான நிலையே தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் இன்று அரசியல் அமைப்பு பேரவை கூடவுள்ளது. இதனிடையே சுமார் 75 நாட்களாக ஜனாதிபதிக்கு அரசியல் அமைப்பு பேரவையினால் அனுப்பிவைக்கப்பட்ட பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment