Saturday, January 12, 2019

மொட்டு சின்னத்தில் தான் போட்டியிடுவோம் - காஞ்சன ஜயவர்தன.

அடுத்து வரப்போகும் தேர்தலில் தாங்கள் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவர் காஞ்சன ஜயவர்தன
இதனை கூறியுள்ளார்.

தற்போதுள்ள அரசாங்கத்திற்கு தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆளுமையோ, எண்ணமோ இல்லையென அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அடுத்து வரப்போகும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கூறிய காஞ்சனா ஜயவர்தன, அதற்கான முழு நடவடிக்கைகளையும் தற்போது எடுத்து வருவதாக கூறினார்.

விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் பல போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர், மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment