Monday, January 7, 2019

இன்று முதல் மதீப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

வடக்கில் அண்மையில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த அறிவித்தலை கலாநிதி வீரக்கோன் தெரிவித்துள்ளார். இந்த பணிகளை விவசாய அமைச்சு அதிகாரிகள் மற்றும் காப்புறுதி பணியாளர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளவுள்ளனர். பாதிக்கப்பட்ட ஒரு ஹெக்டர் விவசாய நிலத்திற்கு 40 ஆயிரம் ரூபா இழப்பீட்டு தொகை வழங்கப்படவுள்ளது. இந்த இழப்பீட்டு தொகை நியாயமான முறையில் வழங்கப்படும் என்றும் கலாநிதி வீரக்கோன் தெரிவித்தார்.

வடக்கில் அண்மையில் மழை வெள்ளம் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் மன்னார் போன்ற பிரதேசஙளில் உள்ள பயிர் நிலங்கள் பெரும் சேதங்களை எதிர்நோக்கி இருப்பது சுட்டி காட்டப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment