Tuesday, January 8, 2019

நாடாளுமன்ற கலவரம் - ஒருவாரகாலத்திற்குள் அறிக்கை கோரல்.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைமைகளின் போது இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், மோதல்கள் இடம்பெற்றதை அடுத்து, அது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, சம்பவம் தொடர்பான அறிக்கைகளை கோரியுள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக, குழுவின் அங்கத்தவரான, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல்கள் குறித்து வெளியிடப்பட்ட CCTV காணொளிகள், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனை உள்ளடங்கலாக இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து, அது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த குழுவை நியமித்தார். குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ தலைமையில் இன்றைய கூட்டம் இடம்பெற்றது.

No comments:

Post a Comment