Thursday, January 10, 2019

தேர்தல் தொடர்பில் சம்பிக்க ரணவக்க வெளியிட்ட கருத்து

புதிய முறையுடன் விகிதாசார முறைமையும் உள்ளடக்கி தேர்தலை நடத்த வேண்டும். அல்லது பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார். சிவில் சமூக அமைப்புக்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்பிலான ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணையவேண்டும். எந்த முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற முடிவை விரைவில் எடுத்து சட்டமூலத்தை நிறைவேற்றி, ஒரே தினத்தில் தேர்தலை நடத்த வேண்டும். ஆகவே, சட்டமூலத்தை நிறைவேற்றி 9 மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்று சம்பிக்க ரணவக்க கூறினார்.

No comments:

Post a Comment