கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சிரமதானம் அடிப்படையில் புனரமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ராமநாதன் இன்று தனது இளைஞர் படையணியுடன் களமிறங்கியுள்ளார்.
யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்களை கொண்டு பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் தெருக்கள் என அவசியமானவற்றை புனரமைக்கும் பணியில் அவர் இன்றைய நாள் முழுக்க ஈடுபட்டிருந்தார். இப்பணியில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அங்கஜனின் இச்செயற்பாடானது கிளிநொச்சியில் வெள்ளை வேட்டி கசங்காமல் அரசியல் செய்துவரும் சிறிதரனது வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றியுள்ளது. வெள்ள அனர்த்தம் ஏற்பட்டபோது, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வெள்ள நிவாரணங்களை அள்ளிக்கொண்டு பிரதேசத்திற்கு சென்றபோது அவ்விடத்திற்கு சென்று ஓசியில் போட்டோவுக்கு போஸ்ட் கொடுத்த சிறிதரனது உண்மைமுகம் வெளியாகியுள்ளதுடன் இதன் காரணமாக செல்வாக்கு பெரிதும் சரிந்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் நாளை தெற்கிலிருந்து இளைஞர் அணியுடன் நாமல் ராஜபக்ச கிளிநொச்சிக்கு சென்று சிரமதான பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் அறியக் கிடைக்கின்றது.
No comments:
Post a Comment