இனி பாடசாலையில் சட்டக்கல்வி
பாடசாலை பாட விதானத்தில் சட்டக் கல்வியைச் சேர்ப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இந்த அனுமதி பெறப்பட்டமையானது அரசாங்கத்தின் முக்கிய வெற்றியாகும் என்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இதனிடையே, க.பொ.த. உயர்தர உயிரியல் பாடத்திற்கான புதிய பாடவிதானத்தைத் தயாரித்து, அதற்குரிய ஆசிரிய கையேட்டை ஆசிரிய, ஆசிரியைகளுக்கு வழங்கியிருப்பதாக தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், இதற்குரிய ஆசிரிய பயிற்சிகளும் நிறைவடைந்துள்ளதாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜயந்தி குணசேகர தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment