Tuesday, January 8, 2019

எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த உறவும் இல்லை அடித்து கூறுகிறார் ஜயதிஸ்ஸ

ஐக்கிய தேசிய கட்சியுடன் மக்கள் விடுதலை முன்னணி இணைத்து செயற்படுவதாக கூறப்படும் விடயத்தில் எந்தவித உண்மையும் இல்லை. மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பிக்கப்பட்ட காலம்தொட்டு அது ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றது என்று நேற்று ஊடகம் ஒன்றிக்கு பிரத்தியேக செவ்வி வழங்கும்போது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் மக்கள் விடுதலை முன்ணனி உறவை பேணி வருவதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இந்த குற்றசாட்டு முற்றிலும் உண்மையற்றது. ஒரு சமயம் சட்ட விரோத கடவுச்சீட்டுடன் விமல் வீரவன்ச கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட போது அவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுவித்தமையை அமைச்சர் லட்சுமண் கிரியெல்லவும் ஏற்றுக்கொண்டார்.

மறுபுறத்தில் ரணில் விக்கிரம சிங்கவிற்கு எதிராக நம்பிக்கை இல்லாப்பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது மக்கள் விடுதலை முன்ணனி அதில் தன் நேரடி எதிர்ப்பை வெளியிட்டு இருந்தது. இதை முழு நாடும் அறியும். இந்த சமயத்தில் மஹிந்த ராஜபக்சவோ அவரின் தரப்பினரோ வாக்கெடுப்பில் பங்குகொள்ளவில்லை. இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசிய காட்சியுடன் மக்கள் விடுதலை முன்னணி உறவை பேணுகிறது என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்று நலிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment