Friday, January 11, 2019

அர்ஜுனை அழைத்து வராததை நினைத்து, அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் - மஹிந்த அமரவீர.

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

மத்திய வங்கியில் பிணை முறி மோசடி இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கலந்துள்ளன. எனினும் இந்த மோசடியுடன் தொடருடைய அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர முடியாமல் போனதையிட்டு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன் மகேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய தினம் பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை, துருக்கி ஆட்களை மீள ஒப்படைத்தல் உடன்படிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் துருக்கியுடன் மேற்கொண்டுள்ள, ஆட்களை மீள ஒப்படைத்தல் உடன்படிக்கை போல சிங்கப்பூருடனும் மேற்கொண்டு, மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபரான அர்ஜுன மஹேந்திரனை அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதன் மூலமே ஐக்கிய தேசிய கட்சியும் தமது, குற்றச்சாட்டுக்களில் இருந்து தூய்மையடைய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணமுறி மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment