Thursday, January 10, 2019

இருவரின் சந்திப்பு எதற்கு வழி சமைக்கும்?

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று நடைபெற்றது. கொழும்பில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடிய இரா.சம்பந்தன், சட்டத்திற்கும் நீதிக்கும் முரணான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவதனை ஆளுநர் அனுமதிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

அத்துடன் முக்கிய விடயங்கள் தொடர்பில் முடிவுகள் எடுக்கும்போது மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்தால் தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கலாம் அன்று அபிப்பிராயம் தெரிவித்தார். மேலும், அரச நிர்வாக நியமனங்கள் வழங்கப்படும்போது அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுதல், கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் வாழும் பல்லின மக்களிடையே காணப்பட்ட இன விரிசல்களை இல்லாமல் செய்வதற்கு உதவும் எனவும் கூறினார். அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் ஆளுநரும் ஆளுநரின் நிர்வாகமும் செயற்படவேண்டும் என இரா சம்பந்தன் மேலும் இதன்போது கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment