Wednesday, January 9, 2019

இலங்கை வரலாற்றில் கடன் செலுத்துவதற்கு பாரிய தொகை

இடைக்கால ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய, 2019ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 2019ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த அரச செலவினம் 4,470 பில்லியன் ரூபாவாகும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2019 ஆண்டில் கடன் செலுத்துவதற்கு 2200 பில்லியன் ரூபா, ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் அரசாங்கம் ஒன்றினால் வருடம் ஒன்றுக்கு கடன் செலுத்துவதற்கு மாத்திரம் வழங்கப்படவுள்ள மிகப் பெரிய நிதித்தொகை இதுவென்று நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment