Tuesday, January 8, 2019

ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்பத்திலிருந்து இவரும் போட்டியிடுவார் - டிலான் பெரேரா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுக்காப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவும் போட்டியிடப்போவதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை குறிப்பிட்டார். தேர்தலொன்றின் மூலம் அரசாங்கத்தின் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தயாராக உள்ளதாக கூறிய டிலான் பெரேரா, தங்களுக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே, அமோக வெற்றியடையவுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெகு விரைவில் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழும் காலம் வரப்போவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment