Sunday, January 6, 2019

பெருந்தோட்ட மக்களுக்காக, ஒருமீ- சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றியம் பிரதமருக்கு கடிதம்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு தரப்புக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து முதலாளிமார் சம்மேளனம் கருத்து வெளியிடும் போது, தம்மால் தொழிலாளர்களின் வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க முடியாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளன.

எனினும் 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்படவில்லை என்றால் தாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் வேண்டும் என்று, பெருந்தோட்ட தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேநேரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வேதனம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து, ஒருமீ - சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலார்களது வேதன அதிகரிப்பில் கடந்த கால அரசாங்கங்களின் நேரடித் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கடப்பாடுகள் தற்போதைய அரசாங்கத்துக்கும் உண்டு என, ஒருமீ- சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கடிதத்திற்கு பிரதமரிடம் இருந்து தமக்கு உரிய பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக, ஒருமீ - சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment