Friday, January 11, 2019

பல்கலைக்கழகத்திற்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு வந்தது செய்தி

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார அறிவித்துள்ளார். 2018ம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுகளுக்கமைய, இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும். இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை, இன்று முதல் முகவர் புத்தக நிலையங்களில் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இதனிடையே, இம்முறை 31 ஆயிரத்து 158 மாணவர்கள் பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றுள்ளார்கள். கடந்த ஆண்டைவிட ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்பட இருப்பது சிறப்பான விடயமாகும்.

No comments:

Post a Comment