Sunday, January 13, 2019

புதிய அரசியல் அமைப்பு இப்போதைக்கு தேவை இல்லை - அநுநாயக்க தேரர்

அஸ்கிரிய பீட அநுநாயக்க தேரரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சந்தித்து, தேர்தல் தொடர்பில் முக்கிய கலந்துரையாடடில் ஈடுபட்டார்.

நேற்று மாலை நிகழ்ந்த இந்த கலந்துரையாடலில் அநுநாயக்க தேரர், தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார். அரசியலமைப்பு அத்தியாவசியமற்றது என்பதை அஸ்கிரிய பீடம் என்ற வகையில், நாங்கள் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருகின்றோம். நாம் மாத்திரமின்றி மகாநாயக்க தேரர்களும் புதிய அரசியல் அமைப்பு பேரவை தேவையற்றது என்றே கூறி வருகின்றார்கள்.

தற்போதைய அரசாங்கம் மகாநாயக்க தேரர்களைக் கண்டுகொள்வதில்லை. இது யாருடைய தேவைக்கேற்ப வந்தது என்பது பிரச்சினைக்குரியது. பாராளுமன்றத்தில் பொது நிலைப்பாடு ஒன்றை பெறமுடியாத நிலை காணப்படுகின்றது. மாகாண சபைகளை கலைப்பதை தவிர தேர்தலுக்கு எந்தவித தேவைப்படும் இல்லை. பொது மக்களுக்கு தீர்மானமெடுக்கும் சந்தர்ப்பத்தை தேர்தல் ஊடாக வழங்க வேண்டும். முக்கியமாக, அரசியலமைப்பில் எத்தகைய பிளவுகள் இருந்தாலும் முடிந்தளவு மாகாண சபைத் தேர்தலையேனும் நடத்தி, மக்கள் விருப்பத்தை தெரிந்துகொள்ள முடியும் என்றால் அதுவே சிறந்தது என அஸ்கிரிய பீட அநுநாயக்க தேரர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment