Friday, January 11, 2019

நெடுங்கேணியில் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்கள் மீட்பு.

வவுனியா நெடுங்கேணி பகுயில் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நெடுங்கேணியில் நேற்றைய தினம் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த நபர் ஒருவரின் நடமாட்டத்தை அடுத்து, காவல்துறையினர் அவரை சோதனை செய்தனர்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து போலி நாணயத்தாள்களை மீட்டுள்ளதாக, வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட போலி நாணயத்தாள்களில், 5000 ரூபாய் தாள்கள் 18ம், 1000 ரூபாய் தாள்கள் 10 அடங்கலாக ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கபோலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை இன்றைய தினம் குறித்த நபர், வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா நெடுங்கேணி காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment