Tuesday, January 8, 2019

ஹிஸ்புல்லாக்கு பதில் இவர்தான் - தீர்ந்தது குழப்பம்

கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற்றதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா விலகியதையடுத்து, அவரது வெற்றிடத்திற்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதன் பின்னர் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அவரது வெற்றிடத்திற்கு ஒருவரின் பெயரைப் பரிந்துரை செய்யுமாறு கோரிகை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கைக்கு அமைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டார நியமிக்கப்படுவதாக வர்த்தமானி வெளியிடப்பட்டு இந்த குழப்ப நிலைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment