நாட்டை பிளவுபடுத்தும் புதிய அரசியல் அமைப்பு - எச்சரிக்கை செய்கிறார் மஹிந்த
புதிய அரசியலமைப்பு, நாட்டை நிச்சயம் பிளவுப்படுத்துமென்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார் மாதம்பே பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
யுத்தத்தில் பெறமுடியாமல் போன குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ளும் நடவடிக்கைகளே, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் இதன்போது குற்றம் சுமத்தினார். புதிய அரசியலமைப்பின் ஊடாக அக்குறிகோளை நிறைவேற்றிக்கொள்ளவே சிலர் முயன்று வருவதாகவும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டினார். இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் அரசியல்வாதிகளுக்கு ஒழுக்க கோவையொன்றை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமெனவும் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment