Sunday, January 6, 2019

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, அருனலு மக்கள் பெரமுனவின் தலைவர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்.

கைது செய்யப்பட்டு சிறைப்டுத்தப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரரை விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதியிடம் அருனலு மக்கள் பெரமுனவின் தலைவர் டாக்டர்.கிருஷான் ராமசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'கௌரவ ஜனாதிபதி அவர்களிடம் நான் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது, முடியுமானால் எமது ஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள். அதிகாரம் மிக்க ஜனாதிபதியான உங்களால் மட்டுமே இதைச் முடியும்.தேரர் அவர்கள் எவ்வித குற்றமும் செய்யவில்லை.

அவர் சிங்களவர்களுக்காக மட்டுமன்றி தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்தவர் ஆவார். யாழ்ப்பாணம், கொடஹென, வெல்லவத்த ஆகிய இடங்களில் இந்து சமயத்தவருக்கு இடர்கள் ஏற்பட்ட போது தேரர் அவர்கள் முன்நின்று செயற்பட்டுள்ளார். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட ரீதியிலான எவ்வித தொடர்பும் கிடையாது. நாட்டிற்காக குரல் கொடுத்தாரே ஒழிய, கொலை குற்றம் எதுவும் செய்துவிடவில்லை.இதற்காக 6 வருட சிறைவாசம் என்பது அநீதியாகும்.

நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது உங்களுக்கு மாபெரும் வெற்றியை எமது கட்சி பெற்று கொடுத்துள்ளது. நாம் உங்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.தேரர் அவர்களை முடியுமானால் விடுதலை செய்யுங்கள்.நாட்டிற்காக குரல் கொடுக்க ஒருவர் தேவை.ஞானசார தேரரின் கருத்துக்கள் வீரியமானவை என்றாலும் அவற்றை நாம் பிழை என்று கருத முடியாது.

இந்து மதத்தவர் எவரும் தேரர் அவர்களை ஒரு போதும் குறை கூறுவது இல்லை. ஒரு முறை மட்டக்களப்பில் சிலை ஒன்றினை திறந்துகொள்ள மக்கள் திண்டாடிய வேளையில், ஞானசார தேரர் தலையிட்டு மக்கள் கைவசம் ஒப்படைத்தார்.

எனவே நான் மிக கௌரவத்துடன் தமிழ் கட்சி என்ற வகையில் மாண்புமிகு ஜனாதிபதியிடமும், பொறுப்புள்ள அதிகாரிகளிடமும் எதிர்வரும் சுதந்திர தினத்தில் பொது மன்னிப்பின் அடிப்படையில் ஞானசார தேரரை விடுதலை செய்ய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டு கொள்கின்றேன். ஜனாதிபதியின் நீண்ட ஆயுள் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.' என, அருனலு மக்கள் பெரமுனவின் தலைவர் டாக்டர்.கிருஷான் ராமசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment