Thursday, January 10, 2019

நாளை அறிக்கை முன்வைக்கப்படும்

புதிய அரசியல் அமைப்பின் உருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழுவின் அறிக்கைகள் நாளை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளன.

குறித்த வழிநடத்தில் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போதே நாளைய தினம் குறித்த ஆலோசனை அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட சில அறிக்கைகள் முன்வைக்கப்படும். அரசியல் அமைப்பின் வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பிப்பார். இதேநேரம் அரசியல் அமைப்புசபையும் நாளை கூடவுள்ளது.

No comments:

Post a Comment