Thursday, January 10, 2019

சிலிண்டர் வெடித்ததில் ஆண் ஒருவர் பலி

நுவரெலியா – ராகலை பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவர் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளார். பெலியத்த – கெடமான்ன பகுதியில் உள்ள அதிவேக மார்க்கத்தில் கடமையாற்றி வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ளார்.

எரிவாயு சிலிண்டரை வெட்ட முயற்சித்த பொது குறித்த சிலிண்டர் வெடித்துள்ளதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றார்கள். படுகாயம் அடைந்த அவரை தங்காலை – தோர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment