Friday, January 11, 2019

இனி பாடசாலை சூழலில் இவை நடைபெறாது -ஜனாதிபதி விசேட பணிப்புரை

பாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றைய நாளில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.

தேவையான சட்ட திருத்தங்களை விரைவாக முன்னெடுத்து, பாடசாலை பிள்ளைகளை இலக்காகக்கொண்டு நடத்தப்படும் போதைப்பொருள் விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார், இதற்காக அனைத்து தரப்பினர்களினதும் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

No comments:

Post a Comment