Sunday, January 6, 2019

ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா?

ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடுவதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த தீர்மானம் குறித்து பல தரப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

அரசியலமைப்புக்கு அமைய, ஜனாதிபதி தேர்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு பின்னர் எந்த நேரத்திலும் அறிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் குறித்த திகதி இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் பொது எதிரணியினர் ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment