Monday, January 7, 2019

ஆபத்தான கம்பளிப்பூச்சி - எச்சரிக்கை செய்தி

சேனா கம்பளிப்பூச்சி வகையினை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.

குறித்த சேனா கம்பளிப்பூச்சி வகை பயிர் செய்கையை பெருமளவில் பாதிக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையை பேராதனை பல்கலைக்கழகம் தயாரித்து, விவசாய அமைச்சிடம் கையளித்துள்ளது. அதில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நைஜீரியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த கம்பளிப்பூச்சி, இலங்கையின் மூன்று மாவட்டங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. ஒரு வகையான இடைவிடாத வாசனையை கொண்டிருக்கும் இந்த வகை புழுக்கள் ஆபத்தானவை. இந்தப் புழு ஒரு தடவையில் 200 முட்டைகள் இடும். ஆரம்ப பருவத்தில் பச்சையாக இருக்கும் இந்த வகை கம்பளிப்பூச்சிகள், பின்னர் பழுப்பு நிறமாக மாற்றம் அடையும்.
இதன் உடல் முழுவதும் பருக்கள் போன்று காணப்படும். தலையின் கீழ் 'ய' எழுத்து போன்று வடிவம் காணப்படும். பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் மிக ஆபத்து வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment